ரேசன் வினியோகத்திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் பதவி பறிக்கப்பட்டது.
மேற்குவங்கத்தில் ரேசன் பொருட்கள் விநியோக திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்த ஜோதிப்ரியா வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி நீக்கியுள்ளார். இதுதொடர்பான பரிந்துரையை மேற்கு வங்க ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் வகித்த இலாகா பிர்பஹா ஹன்ஸ்தாவிடம் வழங்கப்பட்டுள்ளது.