இமாச்சலப் பிரதேசம் அடல் சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலமாக இமாச்சல பிரதேசம் உள்ளது. மேலும், மணாலி – லே நெடுஞ்சாலையில் உள்ள ரோத்தங் கணவாயில் மீக நீளமான அடல் சுரங்கப்பாதை உள்ளது.
இப்பகுதியில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து உள்ளது. இதுதொடர்பான காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இமாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான சுற்றுலா தல பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள், மரங்கள் உட்பட அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். முக்கிய சாலைகளில், பனி படர்ந்து காணப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது.