மாணவர் சேர்க்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 12 பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் 500 -க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக, 25 கல்லுாரிகளில் 5 சதவீத இடங்கள் கூட பூர்த்தியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால், இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
குறைந்த அளவு மாணவர்களுடன் செயல்படும் கல்லுாரிகளால், தரமான கல்வியை வழங்க முடியாது என்பதாலும், ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 12 பொறியியல் கல்லூரிகளை மூடவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
ஒரே நேரத்தில் 25 கல்லுாரிகளை மூடினால், பல்கலையின் வருவாய் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.