ரஷ்யா - இந்தியா நட்பு – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
Mar 22, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா – இந்தியா நட்பு – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Aug 3, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டு காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்கும் முக்கிய நாடுகளாக மாறி உள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முனிச் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி சென்றுள்ளார். ஜெர்மனி நாளிதழ் ஒன்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேட்டி எடுத்தது. அப்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மத்தியில், ரஷ்யா உடனான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, “பல தசாப்தங்களாக மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கின. இந்தியாவிற்கு அல்ல. இருப்பினும், இந்த போக்கு தற்போது மாறிவிட்டது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டு காலத்தில் மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்கும் முக்கிய நாடுகளாக மாறி உள்ளன.

அனைத்து நாடுகளும் தங்களின் கடந்த கால அனுபவங்களை வைத்து, பிற நாடுகளுடன் உறவைப் பேணி வருகின்றன. சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில், ரஷ்யா இந்தியாவின் உறவை எப்போதும் காயப்படுத்தியது கிடையாது. இந்தியாவும் ரஷ்யாவும் நிலையான உறவைப் பேணி வருகின்றன.

ரஷ்யாவுடனான வல்லரசு நாடுகளின் உறவுகளில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்துள்ளன. ஆனால், இந்தியா – ரஷ்யா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது. இதன் காரணமாகவே, தற்போது, ரஷ்யாவுடனான எங்கள் உறவு அமைந்துள்ளது.

சீனாவுடனான இந்தியாவின் உறவு அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் கடினமானதாக இருந்து வருகிறது. நாங்கள் சீனாவைப் பார்ப்பதைப் போல், ஐரோப்பிய நாடுகளும் சீனாவைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

இதே போல்தான், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை பார்ப்பது போல், இந்தியா ரஷ்யாவை பார்க்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் நினைக்க முடியாது. இதை ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கிய போது, ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கில் இருந்து எரிசக்தியை கொள்முதல் செய்ய ஆரம்பித்தன. முன்னதாக, இந்தியா மத்திய கிழக்கில் அதிக அளவில் எரிபொருளை கொள்முதல் செய்து வந்தது. ஆனால், ரஷ்யா – உக்ரைன் போரின் போது, ஐரோப்பிய நாடுகள் அதிக விலை கொடுத்து எரிபொருள் வாங்கியதால், இந்தியாவை விட்டுவிட்டு, ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

அந்த நேரத்தில், நாங்கள் இன்னும் அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது விலை பல மடங்கு உயர்ந்திருக்கும். இதன் காரணமாக, மாற்று வழியில் எங்கள் எரிசக்தி சந்தையை நாங்கள் நிலைப்படுத்தினோம் என்று கூறினார்.

Tags: Jai sankarRussia-India friendship – Union Minister Jaishankar's explanation!
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம்!

Next Post

ஆடி அமாவாசை! : பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

Related News

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies