போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jun 7, 2025, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Feb 22, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடனடியாக, பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசின் துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று கைது செய்ப்பட்டனர்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.

முறையான கல்வித் தகுதியும், தகுதித் தேர்வில் வெற்றியும் பெற்று, பல ஆண்டுகளாகக் காத்திருந்தும், தங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் வஞ்சித்து வரும் தமிழக அரசை வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்திய பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்கள் நேற்றைய தினம் திமுக அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வரும் திமுக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்துவதில் எதற்காகத் தயங்குகிறது என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளர்கள்,… pic.twitter.com/cwfVXkRHKv

— K.Annamalai (@annamalai_k) February 22, 2024

அதுமட்டுமின்றி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளர்களுக்கான ரூ.1000 உதவித் தொகையை உயர்த்துவதாக அறிவித்தது முதல், பல மாவட்டங்களில் உதவித் தொகை வழங்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்திருக்கிறது.

உண்மையில் இந்த திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது? உடனடியாக, பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். பணம் வசூலிக்கலாம் என்பதற்காக மாற்றுத் திறனாளர்கள் பணி நியமனங்களைக் காலதாமதப்படுத்தும் எண்ணம் இருந்தால், துறையற்ற அமைச்சர்களின் இன்றைய நிலையை பணிவன்புடன் நினைவுபடுத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: k annamalai
ShareTweetSendShare
Previous Post

கமிஷன் அடிப்பதற்காகவே பட்ஜெட் போடும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

WPL : தொடக்க விழாவில் ஷாருக்கான் பங்கேற்பு!

Related News

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

Load More

அண்மைச் செய்திகள்

ஜூன் 20-ம் தேதி வெளியாகும் டிஎன்ஏ திரைப்படம்!

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies