டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளார் மேலும் இவர் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 17 வது ஐபிஎல் சீசன் நடைபெறவுள்ளது.
இதில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.
இந்த நிலையில் நேற்று இந்த ஐ.பி.எல். தொடரின் அட்டவணை வெளியாகியது. முதற்கட்டமாக 5 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.
இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.
அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் முதல் 7 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் எனவும் தற்போது இவர் பேட்டிங் மற்றும் ஓட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எனவும் டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.