போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு : கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!
Jun 7, 2025, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு : கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Feb 25, 2024, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக மாநில தலைவர் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவர், இந்தப் பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளதும், மேலும் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம், தமிழக அரசு நிவாரண நிதியாக வழங்கியுள்ள புகைப்படங்களும், அமைச்சர் சேகர்பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களும், மற்றொரு தேடப்படுபவரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் என்பவர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களிடம் கட்சி நிதி வழங்கியுள்ள புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

மேலும், தமிழ்த் திரைத் துறையில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், தமிழக பாஜக சார்பாக எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசை பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட… pic.twitter.com/n8mJNDnPqd

— K.Annamalai (@annamalai_k) February 25, 2024

Tags: tamil nadu bjp presidentDMK officialsdrug traffickingAnti-Narcotics Unit.
ShareTweetSendShare
Previous Post

மக்களவை தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள் : முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Next Post

புரோ கபடி : பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம் !

Related News

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம்!

திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் – இளைஞர்கள் சாலை மறியல்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

இன்றைய தங்கம் விலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – சென்னையில் இன்று தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி!

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

நார்வே செஸ் போட்டி : 7-வது முறையாக பட்டம் வென்றார்!

400 ட்ரோன்கள், 40 ஏவுகணைகள் – உக்ரைனை பழி வாங்கிய ரஷ்யா!

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஜே.டி., வான்ஸை அதிபராக்க வேண்டும் – எலான் மஸ்க் ஆதரவு

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

காஞ்சிபுரத்தில் பாஜக பயிலரங்கம் – மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!

இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருது – ஆர்மோனிய பெட்டியின் ரகசியத்தை உடைத்த இசைஞானி!

2026 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் – வங்க தேச இடைக்கால தலைவர் அறிவிப்பு!

இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் தர்மேந்திர பிரதான்

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies