சுதர்சன் பாலத்தை மோடி கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் முடிவு செய்தார்- பிரதமர் நெகிழ்ச்சி!
Jun 8, 2025, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதர்சன் பாலத்தை மோடி கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் முடிவு செய்தார்- பிரதமர் நெகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Feb 25, 2024, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதர்சன் பாலத்தை தாம் கட்ட வேண்டும் என பகவான் கிருஷ்ணர்  முடிவு செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்லும் வகையில், கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார்.

அப்போது, குஜராத் முதலமைச்சராக இருந்த போது,  சுதர்சன் சேது திட்டம் தொடர்பாக அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசிடம்  கோரிக்கை வைத்தேன்.ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. அந்த பாலத்தின் திறப்பு விழா  இன்று நடைபெற்றுள்ளது. சுதர்சன் பாலத்தை தாம் தான்  கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் முடிவு செய்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

நான் என்னுடன் ஒரு மயில் இறகை எடுத்துச் சென்று அதை அங்கே அளித்தேன். எனது கனவு இன்று நனவாகியதால் என் இதயம் உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது என்றும் பிரதமர் கூறினார்.

புதிய இந்தியாவுக்கான உத்தரவாதத்தை  மக்களுக்கு வழங்கியபோது, எதிர்க்கட்சிகள் என்னைக் கேலி செய்தன. ஆனால் இன்று ஒவ்வொரு இந்தியனும் தங்கள் கண் முன்னே ஒரு புதிய இந்தியா கட்டப்படுவதை பார்க்க முடிகிறது.

நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதிலும் மக்களுக்காக எந்த ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் முயற்சி அனைத்தும் ஒரு குடும்பத்தை சுற்றியே இருந்தது. ஊழலை வைத்து ஐந்தாண்டுகள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்று சிந்திப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. 2014-ல் நீங்கள் அனைவரும் என்னை ஆசிர்வதித்து டெல்லிக்கு அனுப்பிய போது  நாட்டைக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தேன்.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தற்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரம் ஆக உருவெடுத்துள்ளது.  அதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் நீங்கள் பார்க்கக்கூடிய கட்டுமான அற்புதங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

செனுப் பாலம், மும்பையில் உள்ள அடல் சேது, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தூக்கு பாலம் போன்ற பொறியியல் அதிசயத்திற்கு சுதர்சன் சேது ஒரு எடுத்துக்காட்டு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: MiangujaratLord KrishnaSudarshan Setu bridgeNarendra Modi
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் ஊதா திருவிழா: குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்!

Next Post

ஆழ்கடலில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies