ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Jan 14, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் பூஜை செய்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முஸ்லீம் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி 17-ஆம் நூற்றாண்டில் இந்துக் கோவில்களை இடித்து விட்டு கட்டப்பட்டது.

ஆகவே, மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்து சமூகத்தைச் சேர்ந்த சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து மசூதி நிர்வாகத் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

ஆனால், வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க 2 நீதிமன்றங்களும் மறுத்து விட்டன. இதை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஞானவாபி வளாகத்தில் அறிவியல் பூர்வமான விரிவான ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த 5 மாதங்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்துக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்னர், மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் பூஜைகள் செய்து வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதனிடையே, இங்கு இந்து மக்கள் பூஜை செய்ய அனுமதிக்கக்கூடாது என முஸ்லீம் அமைப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். முழு விசாரணைக்கு பின்னர் இன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், இந்து மக்கள் இந்த வளாகத்தில் பூஜை செய்து கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. மேலும், முஸ்லீம் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags: gnanavapi masqueHindus allowed to worship in Gnanawabi complex - Court orders action!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இருந்து திமுகவின் குப்பை அரசியலை அகற்ற வேண்டும்! – அண்ணாமலை

Next Post

முத்துராமலிங்க தேவர் வடிவில் பிரதமர் மோடி!- அண்ணாமலை பேச்சு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies