பல்லடம் வரும் பிரதமர் மோடி! : தாமரை வடிவில் பொதுக்கூட்ட மேடை!
Sep 10, 2025, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் வரும் பிரதமர் மோடி! : தாமரை வடிவில் பொதுக்கூட்ட மேடை!

Web Desk by Web Desk
Feb 26, 2024, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 பிரதமர் மோடி பல்லடத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்குத், தமிழகமே இதுவரை கண்டிராத அளவில் கூட்டத்தைத் திரட்டுவதற்கும், பிரமாண்ட ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொதுக்கூட்ட மேடை தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தமிழகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்புத் திட்டங்களைப் அவர் தொடங்கி வைக்கிறார்.  பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா மாநாடு நாளை நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 3மணிக்கு கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து மாதப்பூரில், மாநாடு நடைபெறும் மைதானத்தில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தாமரை வடிவில் மேடை அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் அளவிலான பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்து கொள்வாரகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினம் விழா நடைபெறும் இடம் முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு போலீசார் மைதானம் முழுவதும் தீவிர சோதனையை மேற்கொண்டனர். பார்வையாளர்களுக்கிடையில் பிரதமர் திறந்தவெளி வாகனத்தில் வருவதற்காக தார்த்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு மைதானம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாநாடு நடைபெறக்கூடிய சூழலில், பல்லடம் நகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு, பிற மாவட்டங்களில் இருந்து பல்லடத்திற்கு வரும் கனரக வாகனங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மாற்று வழிகளில் செல்லவும், டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து, காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் உள்ளனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் விழா கோலம் பூண்டுள்ளது.

Tags: PM ModiEn man En makkal
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகி : முதல்வர் விளக்கம் அளிக்க அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!!

Next Post

ராகுல் தொகுதியில் வேட்பாளரை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட் : இண்டி கூட்டணியில் குழப்பம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies