மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் ஆறாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற உ.பி. அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 55 ரன்களை எடுத்தார். யாஸ்திகா 26 ரன்களும், அமெலியா கெர் 23 ரன்களும் எடுத்தனர்.
உ.பி. வாரியர்ஸ் அணியில் உள்ள அஞ்சலி, தீப்தி சர்மா, ராஜேஸ்வரி, கிரேஸ், சோஃபி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அலிசா ஹீலி 33 ரன்களும், கிரண் நவ்கிரே 57 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்ய கிரேஸ் ஹாரிஸ் 38 ரன்களும், தீப்தி சர்மா 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் உ.பி. அணி 17 ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்து தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
மும்பை அணியில் இஸ்ஸி வோங் 2 விக்கெட்களையும், அமெலியா கெர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் உ.பி. அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகி விருது 57 ரன்களை அடித்த உ.பி. வாரியர்ஸ் அணியின் கிரண் நவ்கிரேவுக்கு வழங்கப்பட்டது.