WPL : டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி!
Jul 26, 2025, 02:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி!

Web Desk by Web Desk
Mar 1, 2024, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் ஏழாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது.

டெல்லி அணியில் ஷாபாலி வர்மா அரைசதம் எடுத்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.ஆலிஸ் கேப்ஸி 46 ரன்களும், மரிசான் கேப் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ஜெஸ் ஜோனாசென் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக சோபி டெவின் மற்றும் நாடின் டி கிளர்க் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷ்ரேயங்கா படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இதில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் சோஃபி டெவின் களமிறங்கினர். இதில் சோஃபி டெவின் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஸ்ம்ரிதி மந்தனா அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆனால் திடீரென அவர் ஆட்டமிழந்தார். அவர் 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் எடுத்து மொத்தமாக 74 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய மேகனா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மரிசான் கேப் மற்றும் அருந்ததி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷிக்காக பாண்டே 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது டெல்லி அணியின் மரிசான் கேப்புக்கு வழங்கப்பட்டது.

Tags: womens crickett 20WPL
ShareTweetSendShare
Previous Post

பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

Next Post

பொன். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்! – அண்ணாமலை வாழ்த்து

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies