WPL : டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி!
Jun 8, 2025, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி!

Web Desk by Web Desk
Mar 1, 2024, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் ஏழாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது.

டெல்லி அணியில் ஷாபாலி வர்மா அரைசதம் எடுத்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.ஆலிஸ் கேப்ஸி 46 ரன்களும், மரிசான் கேப் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ஜெஸ் ஜோனாசென் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக சோபி டெவின் மற்றும் நாடின் டி கிளர்க் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷ்ரேயங்கா படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இதில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் சோஃபி டெவின் களமிறங்கினர். இதில் சோஃபி டெவின் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஸ்ம்ரிதி மந்தனா அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆனால் திடீரென அவர் ஆட்டமிழந்தார். அவர் 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் எடுத்து மொத்தமாக 74 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய மேகனா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மரிசான் கேப் மற்றும் அருந்ததி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷிக்காக பாண்டே 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது டெல்லி அணியின் மரிசான் கேப்புக்கு வழங்கப்பட்டது.

Tags: womens crickett 20WPL
ShareTweetSendShare
Previous Post

பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

Next Post

பொன். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்! – அண்ணாமலை வாழ்த்து

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies