ஈரானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கு பதிவும் நடைபெற்று வருகிறது.
ஈரானில் நடைபெற்ற 2022 புரட்சிக்கு பிறகு ஈரான் எதிர்கொள்ளும் முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
ஈரானிய அரசு, ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் 22 வயதான மஹ்சா அம்னி சிறையில் இறந்ததார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் தேர்தலில் ஈரானிய அரசின் இறையாட்சியை மாற்ற குரல் கொடுக்கும் யாருக்கும் தேர்தலில் நிற்க அனுமதியளிக்கப்படவில்லை. தேர்தலில் நிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் பழமைவாதிகள் மற்றும் கடினபோக்காளர்கள் மட்டுமே.
ஈரான் பொருளாதாரம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈரானிய ராணுவ வீரர்கள் மத்திய கிழக்கு மற்றும் ரஷியாவில் பங்கேற்றதால் மேற்குலக நாடுகளின் மானிய இழப்புக்கு ஈரான் ஆளானது.
290 தொகுதிகள் கொண்ட பாராளுமன்றத்துக்கு 15 ஆயிரத்துக்கு அதிகமான பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 116 பேர் மட்டுமே மிதமான அல்லது தீவிர மாற்றத்துக்கான ஆதரவாளர்கள்.
5 தொகுதிகள் மட்டும் ஈரானின் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஆட்சி காலம் 4 ஆண்டுகளாக உள்ளது.