பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, பொது மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. பொது மக்கள் பொருளாதாராத்தில் உயர பல்வேறு திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், அஞ்சல் துறை மூலம் அறிமுகம் செய்யப்பட்ட சிறுசேமிப்புத் திட்டங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.
இதில், ஓய்வூதியதாரர்களால் அதிகம் விரும்பப்படும் மூத்த குடிமகன் சேமிப்பு திட்டத்தில் மட்டும் 90,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இணையான காலத்தை விட 37,000 கோடி அதிகமாகும்.
இதே போல, மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடுத் தொகை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மகளிருக்கான சேமிப்பு திட்டத்தில் இதுவரை 19,000 கோடி ரூபாய் அளவு பொது மக்கள் முதலீடு செய்துள்ளனர்.
மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகியவற்றுக்கான முதலீடு வரம்பு உயர்த்தப்பட்டது. அதாவது, மூத்த குடிமகன் சேமிப்பு திட்ட வரம்பு 30 லட்சமாகக் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. மேலும், மாதாந்திர வருமானம் திட்ட வரம்பு தனி கணக்கிற்கு 9 லட்சமாகவும், இணை கணக்கிற்கு 15 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாகவே, முதலீடுகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.