2 தேசிய மகளிர் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் : அனுராக் தாக்கூர் அறிவிப்பு!
Oct 26, 2025, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 தேசிய மகளிர் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் : அனுராக் தாக்கூர் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Mar 9, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பெண்களுக்கென பிரத்யேகமாக இரண்டு தேசிய சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போன்ற உலகளாவிய போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ள 23 விளையாட்டுகளில் இந்த தேசிய சிறப்பு மையங்கள் கவனம் செலுத்தவுள்ளது.

மாநில அளவில் பயிற்சியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை குறித்து பெங்களூருவில் பேசிய அனுராக் தாக்கூர், “விளையாட்டு என்பது மாநிலங்களின் வரம்பிற்குள் வருவது, இருந்தும் நாட்டில் விளையாட்டை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சியாளர்களுக்கு நாங்கள் நிறைய செலவிட வேண்டும். நாங்கள் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மூன்று முக்கிய விளையாட்டுகளை அடையாளம் காணுமாறு அவர்களிடம் கேட்டுள்ளோம், இதனால் ஹாக்கி, குத்துச்சண்டை மற்றும் தடகளம் போன்றவற்றை எந்த மாநிலம் ஊக்குவிக்கும் என்பதற்கான தகவல்கள் எங்களிடம் உள்ளது” என்று கூறினார்.

மேலும் அவர், ” நான் ஏற்கனவே இந்த தேசிய சிறப்பு மையங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளேன் என்றும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுடன் இணைந்து, நல்ல பயிற்சியாளர்களை உருவாக்குவதில் அதிக நிபுணத்துவம் பெறுவோம்” என்றும் அனுராக் தாக்கூர் கூறினார்.

இந்திய விளையாட்டு ஆணையம் நாடு முழுவதும் 23 தேசிய சிறப்பு மையங்களை நிறுவியுள்ளது. இம்மையங்கள், நம்பிக்கை அளிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு அறிவியல் துணை உபகரணங்கள், பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட தனிப்பட்ட உணவுகள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள், தகுதி வாய்ந்த உதவிப் பணியாளர்கள் மற்றும் உயர் செயல்திறன்மிக்க இயக்குநர்களின் கீழ் ஒட்டுமொத்த மேற்பார்வை ஆகியவை வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Anurag Singh Thakur
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை : காரணம் என்ன?

Next Post

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது! – தட்டித்தூக்கிய போலீஸ்

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies