3 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசு முறைப்பயணமாக இன்று காலை மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார். மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.
இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவின் இரண்டு கப்பல்கள் – INS Tir மற்றும் CGS சாரதி ஆகியவற்றுடன் இந்திய கடற்படையின் ஒரு குழுவும் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறது. இந்த பயணத்தின் போது மொரீஷியஸ் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோருடன் குடியரசு தலைவர் முர்மு ஆலோசனை நடத்துக்கிறார்.
மொரிஷியஸ் சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பல தலைவர்களையும் திரௌபதி முர்மு சந்திக்கிறார். மேலும் ஆப்ரவாசி காட், கண்டங்களுக்கு இடையேயான அடிமை அருங்காட்சியகம் மற்றும் கங்கா தலாவ் ஆகியவற்றை குடியரசு தலைவர் பார்வையிடுவார்.
மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் மொரிஷியஸ் இளைஞர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்திய சமூகத்தினர் பங்கேற்கும் கூட்டத்திலும் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.