புதிய பாரதம் முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் உள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மொரீஷியஸுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருக்கும் குடியரசு தலைவர் முர்மு, போர்ட் லூயிஸில் உள்ள மகாத்மா காந்தி இன்ஸ்டியூட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இன்று மார்ச் 12. 1930 ஆம் ஆண்டு இந்த புனிதமான நாளில் இந்தியாவில் மகாத்மா காந்தி தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க தண்டி அணிவகுப்பு நடத்தப்பட்டது என்றும், மொரீஷியஸ் சுதந்திரம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் என்றும் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா-மொரிஷியஸ் வரலாற்று உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், இது மொரிஷியஸ் இளைஞர்களுக்கு புதிய வழிகளையும் வாய்ப்புகளையும் திறக்கிறது.
7-வது தலைமுறையின் இந்திய வம்சாவளியினருக்கு OCI கார்டு தகுதி நீட்டிக்கப்படுவதால், இன்னும் பல இளம் மொரிஷியர்கள் தங்கள் முன்னோர்களின் நிலத்துடன் மீண்டும் இணைய முடியும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எப்போதும் மொரீஷியஸுக்கும் துணையாக நின்றதாகவும் என்றும் நிற்கும் என தெரிவித்தார்.
மொரிஷியஸின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிப்பதற்கும், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் திரௌபதி முர்மு தெரிவித்தார்.