ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை – மத்திய அரசு அதிரடி!
Mar 15, 2026, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை – மத்திய அரசு அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக தடை செய்து வருகிறது. அந்த வகையில், நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக, ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணியை சட்டவிரோத அமைப்பாக அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீரை பாரதத்தில் இருந்து பிரிப்பதையும், தீவிரவாதத்தை ஆதரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையில், பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாரத மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, தீவிரவாத சக்திகளை களையெடுக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திலும், தேச விரோத நடவடிக்கைகளிலும் ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணி ஈடுபட்டு வந்தது. மேலும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்ததோடு மட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவியும் செய்து வந்தது. இதுமட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்களை புறக்கணிக்குமாறு மக்களிடம் வலியுறுத்தி வந்தது.

இவ்வாறு தேசத்திற்கு எதிராக பல்வேறு சட்டவிரோத செயல்களில் அந்த அமைப்பு ஈடுபட்டு வந்தது. எனவே அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட வழக்கில், ஜேகேஎன்எஃப் தலைவா் நயீம் அகமது கானை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. தற்போது அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

Tags: home ministryJammu Kashmir National FrontJammu Kashmir National Front banned
ShareTweetSendShare
Previous Post

முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் பாரதம் : திரௌபதி முர்மு!

Next Post

மொரிஷியஸ் அதிபர் ரூபன், பிரதமர் ஜுனத் ஆகியோரை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies