ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை – மத்திய அரசு அதிரடி!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை – மத்திய அரசு அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக தடை செய்து வருகிறது. அந்த வகையில், நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக, ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணியை சட்டவிரோத அமைப்பாக அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீரை பாரதத்தில் இருந்து பிரிப்பதையும், தீவிரவாதத்தை ஆதரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையில், பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாரத மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, தீவிரவாத சக்திகளை களையெடுக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திலும், தேச விரோத நடவடிக்கைகளிலும் ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணி ஈடுபட்டு வந்தது. மேலும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்ததோடு மட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவியும் செய்து வந்தது. இதுமட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்களை புறக்கணிக்குமாறு மக்களிடம் வலியுறுத்தி வந்தது.

இவ்வாறு தேசத்திற்கு எதிராக பல்வேறு சட்டவிரோத செயல்களில் அந்த அமைப்பு ஈடுபட்டு வந்தது. எனவே அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட வழக்கில், ஜேகேஎன்எஃப் தலைவா் நயீம் அகமது கானை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. தற்போது அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

Tags: home ministryJammu Kashmir National FrontJammu Kashmir National Front banned
ShareTweetSendShare
Previous Post

முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் பாரதம் : திரௌபதி முர்மு!

Next Post

மொரிஷியஸ் அதிபர் ரூபன், பிரதமர் ஜுனத் ஆகியோரை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies