அந்தமான் கடல் பகுதியில், இன்று 4.3 ரிக்டர்அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று 11.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம், 53 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.