பத்திரனா வரிசையில் மற்றொரு குட்டி மலிங்காவை கண்டறிந்த சிஎஸ்கே : யார் இவர்?
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்திரனா வரிசையில் மற்றொரு குட்டி மலிங்காவை கண்டறிந்த சிஎஸ்கே : யார் இவர்?

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலிங்காவை போலவே சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசும் மற்றுமொரு இளம் பவுலரை சிஎஸ்கே கண்டறிந்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் காயத்தால் முழுமையாக விளையாடாத தீபக் சஹருக்கு பதிலாக இலங்கையின் இளம் வீரர் மதிஷா பதிரனா வாய்ப்பு பெற்றார்.

அந்த வாய்ப்பில் இலங்கை ஜாம்பவான் முன்னாள் வீரர் லசித் மலிங்கா போல சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5-வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினர்.

அதனால் மும்பைக்கு மலிங்காவை போல சென்னைக்கு பதிரனா கிடைத்துள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் மலிங்காவை போலவே சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசும் மற்றுமொரு இளம் பவுலரை சிஎஸ்கே கண்டறிந்துள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் நகரைச் சேர்ந்த குகதாஸ் மதுலன் எனும் 17 வயது கொண்ட அந்த வீரர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியுள்ளார்.

குறிப்பாக செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி அளவிலான தொடரில் அதிரடியான வேகத்தில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி அசத்திய அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் கண்டறிந்துள்ளது.

அதனால் ஐபிஎல் 2024 தொடரில் நெட் பவுலராக செயல்படுவதற்கு அவரை அழைத்து வந்துள்ளதாக தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் அவரை நெட் பவுலராக அழைத்து வந்தோம். இது சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தேர்வாகும். அதில் எம்எஸ் தோனி ஈடுபடவில்லை. ஸ்லிங்கி ஆக்சனை கொண்டுள்ள மதுலன் எங்களுக்கு பயிற்சியில் உதவியாக இருப்பார் என்று நாங்கள் கருதினோம்.

பொதுவாக நாங்கள் வித்தியாசமான வேரியசன்களை கொண்டுள்ள பவுலர்களை பயிற்சியில் பயன்படுத்துவோம். அவர் அது போன்றவர்” என்று கூறினார்.

முன்னதாக பதிரானாவும் இதே போல முதலில் நெட் பவுலராக செயல்பட்டு பின்னர் சென்னை அணியில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

Tags: iplcskt20ipl 2024CSK finds another little Malinga in Pathirana line: Who is this?
ShareTweetSendShare
Previous Post

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுடன் பூடான் பிரதமர் சந்திப்பு!

Next Post

மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies