பிரதமர் மோடியின் பேரணிக்கு கோவை போலீஸ் அனுமதி கொடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவையில் பிரதமர் மோடி தலைமையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 4 கிலோ மீட்டருக்கு பேரணி நடத்த கோவை பாஜக திட்டமிட்டது.
ஆனால், இந்த பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. காரணம், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கோவை காவல் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எந்த கட்சிக்கும் கோவையில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. எனவே, கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என காவல் துறை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோவை காவல்துறையின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில், விசாரணைத்து வந்தது. அப்போது, பாஜக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பால் கனகராஜ், நாடு முழுவதும் பிரதமர் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த காவல்துறை வழக்கறிஞர் கபிலன், கோவை பதட்டமான பகுதி என்பதாலும், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவதாலும் அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறித்து, பிரதமர் மோடியின் சிறப்பு குழு பார்த்துக் கொள்ளும் எனவே, கோவை காவல்துறை பேரணிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.