கேப்டன்சி குறித்து மனம் திறந்த சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ்!
Mar 15, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேப்டன்சி குறித்து மனம் திறந்த சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறுகின்றன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

இன்றையப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று ஐபிஎல் தொடரின் அனைத்து கேப்டன்களையும் ஒன்றிணைத்து கோப்பையுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருந்தார்.

பின்னர் அதிகாரபூர்வமாக ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் தனது கேப்டன் பதவியை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி கிடைத்ததை நான் பெருமையாக நினைக்கின்றேன். ஆனால் அதைவிட எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

எனினும் இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஏனென்றால் எங்களது அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் நான் பெரிய விஷயங்களை செய்ய தேவையில்லை.

அது மட்டுமல்லாமல் எங்கள் அணியில் தோனி இருக்கிறார். ஜடேஜா மற்றும் ரகானே ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் கேப்டனாக இருந்திருக்கிறார்கள்.

இந்த மூன்று வீரர்களும் என்னை நிச்சயமாக வழி நடத்துவார்கள். இதனால் நான் எதை நினைத்தும் கவலைப்படவில்லை. இந்த பொறுப்பை நான் மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்புகிறேன் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இதுபோல் கேப்டன் மாற்றப்பட்டபோது சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் சிஎஸ்கே, தோனி ஆகியோர் தெளிவாக உள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனை செயல்பட்டு கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CSK captain Rudraj opens up about captaincy!cskipl 2024
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க-வுடன் மோதும் பா.ஜ.க வேட்பாளர்கள் – யார்-யார்?

Next Post

அதிர்ச்சி – 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies