2024 ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியில் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்த தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடியது.
இந்த போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதை தொடந்து நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஆன்ட்ரே ரசல் 3 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என மொத்தமாக 25 பந்துகளில் 64 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோருக்கு பெரும் பங்காற்றினார்.
அதேபோல் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிலிப் சால்ட் 54 ரன்களும், ராமண்டின் சிங் 35 ரன்களும் எடுத்தனர்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக தமிழக வீரரான நடராஜன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் மயங்க மார்கண்டே 2 விக்கெட்களும், பட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதை தொடந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் ஷர்மா தலா 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழக்க எய்டென் மார்க்ரம் 18 ரங்களில் ஆட்டமிழந்து சென்றார். அப்போது களமிறங்கிய ஏய்ன்றிச் கிளாசென் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக 8 சிக்சர்கள் என மொத்தமாக 29 பந்துகளில் 63 ரன்களை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியாக 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஹர்ஷித் ராணா அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தார்.
இறுதியாக கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசலுக்கு வழங்கப்பட்டது.