இந்தியா – மொசாம்பிக் – தான்சானியா முத்தரப்புப் பயிற்சி நிறைவு !
Jul 26, 2025, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – மொசாம்பிக் – தான்சானியா முத்தரப்புப் பயிற்சி நிறைவு !

Web Desk by Web Desk
Mar 29, 2024, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – மொசாம்பிக் – தான்சானியா முத்தரப்புப் பயிற்சி மொசாம்பிக்கின் நாகலாவில் நிறைவடைந்தது.

இந்தியா-மொசாம்பிக்-தான்சானியா முத்தரப்பு பயிற்சியின் இரண்டாவது கட்டம் மொசாம்பிக்கில் உள்ள நாகாலாவில் நேற்று நிறைவடைந்தது. இந்த ஒரு வார காலப் பயிற்சி இந்தியா, மொசாம்பிக், தான்சானியா கடற்படைகளுக்கு இடையிலான மேம்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஐ.என்.எஸ் தீர், சுஜாதா ஆகியவை மார்ச் 21 முதல் 28 வரை தொடர்ச்சியான கூட்டுப் பயிற்சிகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் பங்கேற்றன, இது மூன்று கடற்படைகளுக்கும் அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் விலைமதிப்பற்ற வாய்ப்புகளை வழங்கியது.

இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. ஆரம்ப துறைமுக கட்டம் மார்ச் 21 முதல் 24 வரை சான்சிபாரில் உள்ள ஐ.என்.எஸ் தீர் மற்றும் மாபுடோவில் உள்ள ஐ.என்.எஸ் சுஜாதா ஆகியவற்றில் ஒரே நேரத்தில் தீவிர பயிற்சி அமர்வுகள் நடைபெற்றன.

ஐ.என்.எஸ் தீர் மற்றும் ஐ.என்.எஸ் சுஜாதா முறையே தான்சானியா மற்றும் மொசாம்பிக் கடற்படைகளில் இருந்து கடல் ரைடர்களை ஏற்றிக்கொண்டதிலிருந்து மார்ச் 24, அன்று கடல் கட்டம் தொடங்கியது.

மொசாம்பிக் கடற்படைக் கப்பல் நமதிலி மற்றும் தான்சானியா கடற்படைக் கப்பல் ஃபட்டுண்டு ஆகியவற்றுடனான கூட்டு நடவடிக்கைகள், சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) தொலைநோக்குக்கு ஏற்ப பிராந்திய கடற்படைகளுடன் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு மற்றும் நீடித்த முயற்சிகளை வெளிப்படுத்தின.

மொசாம்பிக்கின் நாகாலாவில் ஐ.என்.எஸ் தீர், ஐ.என்.எஸ் சுஜாதா ஆகியவற்றில் நடைபெற்ற நிறைவு விழாவில் மூன்று கடற்படைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். வெற்றிகரமான ஒத்துழைப்பு, கடல்சார் திறன்களைப் புரிந்துகொள்வது, பயிற்சியின் போது பகிரப்பட்ட நோக்கங்கள் ஆகியவற்றை நிறைவுக் குறிப்புகள் எடுத்துக்காட்டின.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மைக்குத் தொடர்ச்சியான ஒத்துழைப்பை இது வலியுறுத்தியது. விருப்பமான பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: India-Mozambique-Tanzania Trilateral Exercise Completed in NagalaMozambique!
ShareTweetSendShare
Previous Post

இந்திய கடற்படை எதிர்கால ஆதார சக்தியாக மாறியுள்ளது! – கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார்

Next Post

பிரதமர் யார் என்பதே தெரியாத கூட்டணி, இண்டி கூட்டணி! – அண்ணாமலை

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies