புதியவகை மோசடி : தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை!
Oct 4, 2025, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதியவகை மோசடி : தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Mar 30, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகமே நவீன மையமாகிய இன்றைய காலகட்டத்தில் மோசடிகளும், கொள்ளைகளும் நவீன மயமாகவே அரங்கேறி வருகிறது.

அந்த மோசடிகளை தடுக்க பாரத பிரதமர் மோடியின் அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தொலைத்தொடர்புத் துறை பாரத மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி உங்களது தொலைபேசி எண்ணை துண்டித்து விடுவோம் என கூறி யாரேனும் தொலைபேசியில் அழைத்து மிரட்டினால் பயப்பட வேண்டாம் என்றும் புகார் தெரிவிக்குமாறும் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

ஒரு சில மோசடி கும்பல் தொடர்பு துறையினர் பேசுகிறோம் என்று கூறி பொது மக்களுக்கு வாட்சப் எண் வழியாகவோ, செல்போன் எண் வழியாக அழைக்கின்றனர்.

பின்னர், உங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் என்றும் உங்களது செல்பேசி எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பின்னர், இது தொடர்பாக பேசி பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர் என்பது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறைக்கு புகார் வந்துள்ளது.

மேலும் அரசு அலுவலர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்து ,மக்களை ஏமாற்ற வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்தும் தொலைத் தொடர்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

சில தருணங்களில் காதல் போன்ற ஆசை வார்த்தைகள் கூறியும் ஏமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால், இது போன்ற அழைப்புகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள், சைபர் குற்றம் நிதி மோசடிகளை செய்ய அச்சுறுத்தவும் தனிப்பட்ட தகவல்களை திருடவும் முயற்சிக்கின்றனர்.

மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ, இந்த எண்களுக்கு, எந்த தனிப்பட்ட விவரங்களையும் +92…… என்ற முதலெழுத்துக்களுடன் வரும் நபர்களுக்கு பகிரவோ வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல் செய்தியில் மக்களை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை அறிக்கையில், ” தொலைத்தொடர்பு துறையினர் யாருக்கும் இதுபோன்ற அழைப்பைச் செய்ய அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தலகள் வழங்குகிறோம்” என்று கூறியுள்ளது.

மேலும், இதுபோன்ற அழைப்புகளைப் பெறும்போது எந்தத் தகவலையும், பணம் உள்ளிட்டவற்றை அனுப்புவதோ, ஏடிஎம் அட்டையின் எண்ணையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதுபோன்ற மோசடி தகவல்தொடர்புகளை சஞ்சார் சாத்தி போர்ட்டலின் (www.sancharsaathi.gov.in) சந்தேகத்திற்குரிய மோசடி தகவல் தொடர்புகள்’ என்ற பிரிவில் புகார் அளிக்குமாறு தொலைத்தொடர்பு துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், குடிமக்கள் தங்கள் பெயரில் உள்ள செல்போன் இணைப்புகளை சஞ்சார் சாத்தி போர்ட்டலின் (www.sancharsaathi.gov.in) ‘உங்கள் செல்பேசி இணைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிக்கு ஆளாகியிருந்தால் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளிக்குமாறு தொலைத் தொடர்புத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Tags: New type of fraud: Telecom sector alert!
ShareTweetSendShare
Previous Post

டெல்லி குடிநீர் வாரிய முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Next Post

ஆ.ராசா கார் சோதனை விவகாரம் – பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Related News

கந்தன் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழா – ஹெச்.ராஜா, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டிக்கர் ஒட்டும் பணியால் பணிச்சுமை அதிகரிப்பு – டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னை கிழக்கு கடற்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு!

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies