'இது தான் ஆரம்பம், இன்னும் நிறைய இருக்கு' - லக்னோ வீரர் மயங்க் யாதவ் பேட்டி!
Jul 26, 2025, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘இது தான் ஆரம்பம், இன்னும் நிறைய இருக்கு’ – லக்னோ வீரர் மயங்க் யாதவ் பேட்டி!

Web Desk by Web Desk
Apr 3, 2024, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்திய லக்னோ அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் தான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே இலக்கு என்று கூறியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.

இந்த தொடரின் 15வது போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதும் பெற்றார். மேலும் 2 ஐபிஎல் போட்டிகளில் 157 கிமீ வேகத்தில் பந்து வீசியதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் மயங்க் யாதவ்.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் பேசியர் அவர் 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதை விடவும், லக்னோ அணியின் வெற்றிக்கு பங்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து அவர், ” பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான வெற்றியில் எனது பங்களிப்பும் இருந்தது மனதளவில் சந்தோஷமாக உள்ளது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான் இலக்கு.

அதற்கான தொடக்கம் தான் இது. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை கேமரூன் க்ரீனின் விக்கெட்டை ரசித்தேன். அதேபோல் காயமடையாமல் இருப்பதற்கு, எனது உடலை சரியாக பராமரிக்கிறேன்.

டயட்டை ஃபாலோ செய்வதோடு, பயிற்சி மற்றும் தூக்கத்தை சரியாக பின் தொடர்கிறேன். எப்போதும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் காயத்தில் இருந்து மீண்டு வர நேரம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் ஐஸ் குளியல் போடுவது அடுத்த சவாலுக்கு தயாராக உதவியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Tags: ipl 2024'This is just the beginningthere's more to come' - Lucknow player Mayank Yadav interviewed!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

Next Post

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும்:  கட்டுப்பாடுகள் விதித்த உயர்நீதிமன்றம்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies