யுகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த் உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும், சைத்ரா சுக்லாடி, யுகாதி, குடி பட்வா, சேத்தி சந்த், நவ்ரே உள்ளிட்ட புனிதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாக்கள் புத்தாண்டையும், வசந்த காலத்தையும் வரவேற்கும் வகையில் கொண்டாடப்படுகின்றன. இவை நமது வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளங்களாகும். இவ்விழாக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் ஆகியவற்றைக் கொண்டு வர வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.