எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்துள்ள கூட்டணி, ஊழல்வாதிகளின் கூட்டணி! - ஜே.பி. நட்டா
Aug 19, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்துள்ள கூட்டணி, ஊழல்வாதிகளின் கூட்டணி! – ஜே.பி. நட்டா

Web Desk by Web Desk
Apr 9, 2024, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 காங்கிரஸ் வானம், நிலம், நீர் என மூன்று உலகிலும் ஊழல் புரிந்திருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் 8 தொகுதிகளில் வரும் 19-ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ராம்பூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றிய ஜே.பி. நட்டா,

‘ஊழலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் ஊழல்வாதிகள் யாரும் தப்பமுடியாது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள். ஆனால், ஊழலைக் காக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கூட்டணி விரும்புகிறது.

நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி அலைகற்றை ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் என மூன்று உலகிலும் காங்கிரஸ் ஊழல் புரிந்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மடிகணினி ஊழல், உணவு தானிய ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் ஊழல் புரிந்துள்ளனர். இத்தகைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணியானது ஊழல்வாதிகளின் கூட்டணி ஆகும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திமுக அமைச்சர்கள் பிணையில் உள்ளனர். ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், கே.சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதா ஆகியோர் சிறையில் உள்ளனர்.

ஊழல்வாதிகளின் கூட்டணியான எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர்கள் சிறையிலோ அல்லது பிணையிலோ இருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் அராஜகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் வாரிசு அரசியலை ஆதரித்துப் பின்பற்றுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்து, ஊழலில் ஈடுபட வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியை பிரதமர் மோடி வழங்கியிருக்கிறார். நாட்டின் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து அவர் மீட்டுள்ளார்.

ஜாதி அடிப்படையில் மக்களை சிலர் பிளவுப்படுத்தும் வேளையில் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்களுக்கான பாதையில் பிரதமர் மோடி தொடர்ந்து பயணிப்பார்.

இந்தத் தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல். நாட்டின் இன்றைய அரசியல் களத்தை வாக்கு வங்கியின் அடிப்படையில் இல்லாமல் வளர்ச்சியை பாஜக முன்னிறுத்துகிறது. இவ்வாறு அரசியல் களத்தை பிரதமர் முற்றிலுமாக மாற்றியுள்ளார்.

ரௌடிகளின் ஆளுகையில் இருந்த உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நமது பெண் குழந்தைகள் அச்சமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். மாநிலத்தின் அனைத்து கிராமங்களுக்கு மின்சார வசதி விரிவுப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Tags: BJP national president JP Nadda
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Next Post

சென்னை வாகன பேரணியில் பிரதமர் மோடி : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Related News

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies