ஐ போன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!
Oct 24, 2025, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ போன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Apr 11, 2024, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகமே நவீன மயமாகும் இன்றைய காலகட்டத்தில் பல மோசடிகளும், திருட்டு வேலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஐ போன் பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.

இந்தியா உட்பட உலகின் 91 நாடுகளில் ஆப்பிள் ஐ போன் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கைத் தகவலை அனுப்பியிருக்கிறது.

இது என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை விடவும் மிக மோசமானதாக இருக்கும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும், ஐ போனில் ஊடுருவல் முயற்சிகள் ஏதேனும் நிகழும் போது, ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற எச்சரிக்கைத் தகவல்களை அனுப்பியிருக்கிறது. அதன் அடிப்படையில் தற்போதும் அனுப்பியிருக்கிறது.

இன்று 92 நாடுகளைச் சேர்ந்த ஆப்பிள் பயனாளர்களுக்கு இந்த எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் 150 நாடுகளைச் சேர்ந்த பயனர்களுக்கும் இந்த தகவல் அனுப்பி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆப்பிள் ஐடியில் இணைக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் குறுந்தகவல் என இரண்டிலும் இந்த எச்சரிக்கை தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த தகவல் சரியாக எத்தனை பேருக்கு வந்திருக்கிறது என்பது குறித்த தரவுகள் கிடைக்கவில்லை.

ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐ போனை தொலைதூரத்தில் இருந்து ஊடுருவ முயற்சிக்கும் கூலிப்படையின் ஸ்பைவேர் தாக்குதலால் நீங்கள் குறிவைக்கப்படுவதை ஆப்பிள் கண்டறிந்துள்ளது.

நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் காரணமாக இந்த தாக்குதல் குறிப்பாக உங்களை குறிவைத்திருக்கலாம் என்று ஐ போன் பயனர்கள் பெற்றுள்ள எச்சரிக்கை மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் எங்கிருந்து நிகழ்த்தப்படுகிறது என்பது குறித்த தகவலைக் கொடுக்க ஆப்பிள் மறுத்துவிட்டது.

மேலும், இதுபோல எச்சரிக்கை செய்தில் பயனாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மெசேஜை பெறும் யூசர்கள் தங்கள் ஐபோன்களில் Settings > Privacy & Security > Lockdown Mode-க்கு செல்ல வேண்டும். இதை ஆன் செய்ய சில நொடிகள் கூட ஆகாது. இருப்பினும், இவை மிகச் சிறந்த பாதுகாப்பை நமக்குத் தருவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேலும், இந்த மெசேஜ் வந்த உடனேயே ஐபோனை சமீபத்திய அப்டேட் செய்ய வேண்டும். ஐவாட், மேக் போன்ற வேறு ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்தினால் அதையும் அப்டேட் செய்ய வேண்டும்.

மேக் அல்லது ஐபேடிலும் இதேபோல இல் லாக் டவுன் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இது நமது சாதனத்திற்குத் தேவையான பாதுகாப்பு தரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: apple i phoneApple warns iPhone users!
ShareTweetSendShare
Previous Post

குடிநீர் வடிகால் வாரிய பணிகள் : சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

அடுத்த 20 ஆண்டுகள் கோப்பையை வெல்ல போகும் அணிகள் : AI கணிப்பு!

Related News

100 ஆண்டுகள் கடந்தாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட சிறுவன் – 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – 45,000 கன அடி நீர் வெளியேற்றம்!

தஞ்சையில் துணை முதல்வர் பார்வையிட வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான விவகாரம் – ஆய்வு குழுவை அமைத்தது மத்திய அரசு!

ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies