திருவண்ணாமலைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் - ஏ.பி.ஜி.பி சாதனை
Mar 15, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் – ஏ.பி.ஜி.பி சாதனை

Sivasubramanian P by Sivasubramanian P
Apr 13, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) நாடு தழுவிய நுகர்வோர் அமைப்பாகும். இது 820 கிளைகளை கொண்டது.

தமிழகத்தில் கடந்த 2005 -ம் ஆண்டு, அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட சென்னை திருவண்ணாமலை நேரடி ரயில் இதுவரை இயக்கப்படாமல் இருந்தது.

மாதந்தோறும் பௌர்ணமிக்கு மட்டும் சென்னை கடற்கரையிலிருந்தும், தாம்பரத்திலிருந்தும் சிறப்பு நீடிப்பு ரயில் சேவை சமீபகாலமாக உள்ளது. என்றாலும்  லட்சக்கணக்கானவர்கள்  கிரிவலம் செல்லும் நிலையில் இது பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.

சமீபத்தில் சென்னையில் வெளியூர் செல்லும் பேருந்து நிலையமும் இடமாற்றம் செய்யப்பட்டதால், திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள்   மிகவும் அவதியடைந்தனர்.

இதனைப்  போக்கும் வகையில், ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் அமைப்பு சார்பில் சென்னை திருவண்ணாமலை இடையே நேரடி இரயில் சேவைக்  கேட்டு 50,000 பக்தர்கள் கையொப்பமிட்டு,  ரயில்வே வாரியத்திடம் விண்ணப்பமாக சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பலனாக தமிழ் வருடப் பிறப்பு தருணத்தில் ஏப்ரல் 13 -ம் தேதி முதல் வாரந்தோறும் மூன்று  நாட்கள், சென்னை பெரம்பூரிலிருந்து திருவண்ணாமலைக்கு காட்பாடி வழியாக முன்பதிவு படுக்கை வசதியுடன் கூடிய அதிவிரைவு ரயில் இயக்கப்படஉள்ளது. இதனை தென்னக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்பதிவு இல்லாத மூன்று பொது இருக்கை பெட்டிகளும் இதில் அடக்கம். இந்த ரயிலில் பெரம்பூர் -திருவண்ணாமலை கட்டணம் ரூ.125 மட்டுமே.

ஏ.பி.ஜி.பி நுகர்வோர் அமைப்பின் தொடர் முயற்சியால் சென்னை பெரம்பூரிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

இந்த முதல் ரயிலை ஏப்ரல் 13 -ம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 1.50 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையத்தில் வரவேற்று, ரயில் ஊழியர்களை ஏபிஜிபி பாராட்டி கௌரவித்தது.

திருவண்ணாமலைக்கு செல்லும் முதல் ரயிலில் ஏராளாமான ஏபிஜிபி தொண்டர்களும் ஏராளமான பக்தர்களும் திருவண்ணாமலை சென்றனர்.

புதிய ரயிலையும், அதில் பயணம் செய்தவர்களையும் திருவண்ணாமலையில் உள்ள இந்து அமைப்புகளும், பொது மக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மூன்று முறை மத்திய அரசுக்கு, ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கையெழுத்துக்களுடன் மத்திய அமைச்சர் மாண்புமிகு.  முருகன் அவர்கள் மூலம்,  முதல் முறை பிரதமர், மற்ற இரு முறைகளில் ரயில்வே அமைச்சர்  ஆகியோரிடம் மனுக்கள் தொடர்ந்து கொடுத்து, இது சாத்தியமாயிற்று .

விரைவில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு  நேரடி ரயிலும் சாத்தியமாகும் என்று அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) தெரிவித்துள்ளனர்.

Tags: Southern Railwaysabgpchennai to thiruvannamalai train
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல் விலை!

Next Post

சித்திரை திருவிழா காலத்தில் மதுரையில் இருக்கும் பாக்கியம் பெற்றேன் : அமித் ஷா

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies