ஏரியா சபை கூட்டத்தை நடத்தாத திமுக அரசு : பொது மக்கள் குற்றச்சாட்டு!
Mar 16, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏரியா சபை கூட்டத்தை நடத்தாத திமுக அரசு : பொது மக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களின் அடிப்படை குறைகளை தீர்க்க ஏரியா சபை கூட்டத்தை தேர்தல் விதிமுறைகளுக்கு உடபட்டு நடத்தலாமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அரசுத்துறை செயளாலருக்கு உத்தரவிட்டும் தமிழக அரசு ஏரியா சபை கூட்டத்தை நடத்தாமல் மெத்தனமாக  உள்ளது.

தமிழகத்தில் 22 மாநகராட்சிகள் உள்ளது. மேலும் புதியதாக 4 மாநகராட்சிகள் உருவாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள 12,000 கிராமங்களில் மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பான தெரு விளக்கு, உள்ளிட்டவைகளை மக்கள் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார்கள், சில கிராம சபை கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்வர்.

அதேபோல் மாநகராட்சிகளில் ஏரியா சபை கூட்டம் நடத்துவதற்காக திமுக அரசு கடந்த ஆண்டு 23-05-2023 அன்று உத்திரவிட்டது. இதில் நான்கு முறை ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதில் மக்கள் பிரச்சனைகள் உடனடியாக கேட்டு தீர்க்கபடுமென தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் தேதியும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியும், சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் தேதியும் எரியா சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் திமுக அரசு அமைத்து இதுவரை எந்த மாநகராட்சிகளிலும் முழுமையாக ஏரியா சபை கூட்டம் ஒருமுறை கூட நடத்தப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் கடந்த முறை பெயரளவில் இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் ஏரியா சபை கூட்டம் நடத்தியதாக கூறப்பட்டது.

ஆனால் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று ஏரியா சபை கூட்டம் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் ஏரியா சபை கூட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் நடைபெறவில்லை.

ஏரியா சபை கூட்டத்தில்,  சாலை பிரச்சனைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதலில் உள்ள பிரச்சனைகள், தெருவிளக்குகள் பூங்காக்கள் புதர் மண்டி கிடப்பது, சிறிய மழைக்கே ஆறு போல் தெருக்களில் தேங்கும் தண்ணீர், தெருக்களை தரம் உயர்த்துவது குறித்து, குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த பொறியாளர்கள் வார்டு கவுன்சிலர்களிடம் மக்கள் நேரடியாக கேள்வி எழுப்ப முடியும்.

சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகளின் மெத்தனத்தால் மிக்ஜாம் புயல் சென்னை மாநகராட்சியின் பணிகளை அம்பலப்படுத்தியது. இந்த தேர்தலிலும் ஏரியா சபை கூட்டம் நடத்தினால் அம்பலப்பட்டு விடுவோம் என்று ஏரியா சபை கூட்டத்தையே நடத்தாமல் சென்னை மாநகராட்சி மெத்தனம் காட்டியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலரான வழக்கறிஞர் சங்கர் ஏரியா சபை கூட்டம் நடத்த வேண்டும் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கும் ஏரியா சபை கூட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்திருந்தார.

ஆனால் தேர்தல் காலம் என்பதால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் அவரிடமும் மனு அளிக்கப்பட்டிருந்தது.  இதனை பரிசீலித்த  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஏரியா சபை கூட்டம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறையின் முதன்மைச் செயலாளருக்கு நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆனால் அனுமதி கிடைத்தும், எந்த வகையிலும் செவி சாய்க்காத சென்னை மாநகராட்சியும், தமிழகத்தில் உள்ள பல மாநகராட்சிகளிலும் இன்று ஏரியா சபை நடத்தாமல், மாநகராட்சி ஆணையர்களே இருட்டடிப்பு செய்துள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் ஏரியா சபை நடத்தவில்லை என தமிழக அரசிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இது குறித்து தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலுகாக மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் திமுகவோ ஏரியா சபை கூட்டம் குறித்து வாய் திறக்காமல் அமைதிகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: DMK Govt not holding Area Council Meeting: Public Accusation!
ShareTweetSendShare
Previous Post

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய “எல் கிளாசிக்கோ”!

Next Post

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கி சூடு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies