ஏரியா சபை கூட்டத்தை நடத்தாத திமுக அரசு : பொது மக்கள் குற்றச்சாட்டு!
Oct 26, 2025, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏரியா சபை கூட்டத்தை நடத்தாத திமுக அரசு : பொது மக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 14, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களின் அடிப்படை குறைகளை தீர்க்க ஏரியா சபை கூட்டத்தை தேர்தல் விதிமுறைகளுக்கு உடபட்டு நடத்தலாமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அரசுத்துறை செயளாலருக்கு உத்தரவிட்டும் தமிழக அரசு ஏரியா சபை கூட்டத்தை நடத்தாமல் மெத்தனமாக  உள்ளது.

தமிழகத்தில் 22 மாநகராட்சிகள் உள்ளது. மேலும் புதியதாக 4 மாநகராட்சிகள் உருவாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள 12,000 கிராமங்களில் மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பான தெரு விளக்கு, உள்ளிட்டவைகளை மக்கள் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார்கள், சில கிராம சபை கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்வர்.

அதேபோல் மாநகராட்சிகளில் ஏரியா சபை கூட்டம் நடத்துவதற்காக திமுக அரசு கடந்த ஆண்டு 23-05-2023 அன்று உத்திரவிட்டது. இதில் நான்கு முறை ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதில் மக்கள் பிரச்சனைகள் உடனடியாக கேட்டு தீர்க்கபடுமென தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் தேதியும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியும், சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் தேதியும் எரியா சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் திமுக அரசு அமைத்து இதுவரை எந்த மாநகராட்சிகளிலும் முழுமையாக ஏரியா சபை கூட்டம் ஒருமுறை கூட நடத்தப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் கடந்த முறை பெயரளவில் இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் ஏரியா சபை கூட்டம் நடத்தியதாக கூறப்பட்டது.

ஆனால் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று ஏரியா சபை கூட்டம் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் ஏரியா சபை கூட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் நடைபெறவில்லை.

ஏரியா சபை கூட்டத்தில்,  சாலை பிரச்சனைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதலில் உள்ள பிரச்சனைகள், தெருவிளக்குகள் பூங்காக்கள் புதர் மண்டி கிடப்பது, சிறிய மழைக்கே ஆறு போல் தெருக்களில் தேங்கும் தண்ணீர், தெருக்களை தரம் உயர்த்துவது குறித்து, குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த பொறியாளர்கள் வார்டு கவுன்சிலர்களிடம் மக்கள் நேரடியாக கேள்வி எழுப்ப முடியும்.

சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகளின் மெத்தனத்தால் மிக்ஜாம் புயல் சென்னை மாநகராட்சியின் பணிகளை அம்பலப்படுத்தியது. இந்த தேர்தலிலும் ஏரியா சபை கூட்டம் நடத்தினால் அம்பலப்பட்டு விடுவோம் என்று ஏரியா சபை கூட்டத்தையே நடத்தாமல் சென்னை மாநகராட்சி மெத்தனம் காட்டியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலரான வழக்கறிஞர் சங்கர் ஏரியா சபை கூட்டம் நடத்த வேண்டும் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கும் ஏரியா சபை கூட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்திருந்தார.

ஆனால் தேர்தல் காலம் என்பதால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் அவரிடமும் மனு அளிக்கப்பட்டிருந்தது.  இதனை பரிசீலித்த  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஏரியா சபை கூட்டம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறையின் முதன்மைச் செயலாளருக்கு நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆனால் அனுமதி கிடைத்தும், எந்த வகையிலும் செவி சாய்க்காத சென்னை மாநகராட்சியும், தமிழகத்தில் உள்ள பல மாநகராட்சிகளிலும் இன்று ஏரியா சபை நடத்தாமல், மாநகராட்சி ஆணையர்களே இருட்டடிப்பு செய்துள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் ஏரியா சபை நடத்தவில்லை என தமிழக அரசிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இது குறித்து தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலுகாக மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் திமுகவோ ஏரியா சபை கூட்டம் குறித்து வாய் திறக்காமல் அமைதிகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: DMK Govt not holding Area Council Meeting: Public Accusation!
ShareTweetSendShare
Previous Post

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய “எல் கிளாசிக்கோ”!

Next Post

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கி சூடு!

Related News

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies