எனது வெற்றியை எனது துரோகிகளால் ஒன்றும் செய்ய முடியாது : டிடிவி தினகரன் பேச்சு!
Sep 6, 2025, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எனது வெற்றியை எனது துரோகிகளால் ஒன்றும் செய்ய முடியாது : டிடிவி தினகரன் பேச்சு!

Web Desk by Web Desk
Apr 16, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதற்கு எனக்கு உடன்பாடில்லை, மக்கள் பணத்திற்காக வாக்களிக்க மாட்டார்கள், எனது வெற்றியை எனது துரோகிகளால் ஒன்றும் செய்ய முடியாது  என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான டிடிவி. தினகரன் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய டிடிவி. தினகரன்,

முல்லைப் பெரியாறு அணை 152 அடியாக நிலை நிறுத்துவது, நமது மாநில உரிமையை பாதுகாத்து விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் நிதி உதவி பெற்று வைகை அணை முறையாக தூர்வரப்படும். தமிழக கேரளா இணைக்கும் வழித்தடமான தேவாரம் சாக்கலூத்து மெட்டு ரோடு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அம்மா ஆட்சியில் தேனி மாவட்டத்தில் கொண்டுவர வரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் குறிப்பாக 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டிப்பட்டி தெப்பம்பட்டி துப்பறிவு அனைத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்.

கண்ணகி கோட்டம் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். திண்டுக்கல் சபரிமலை ரயில் சேவை தொடங்குவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிக்கைகளை தெரிவித்தார்.

இயற்கை சார்ந்த தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படும். இயற்கையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளேன். இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும் விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும். அதேபோன்று தேனி இயற்கை சார்ந்த வளமாய்ந்த பகுதி என்றாலும் வளர்ச்சிக்கான திட்டமாக இங்கு விமான நிலையம் ஏற்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கு இயற்கையின் அளவு பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைக்கப்படும். அதற்கு மக்கள் வாய்ப்பளியுங்கள் மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைந்த உடன், நான் செயல்படுத்தும் திட்டங்களை நிச்சயம் அவர்கள் செயல்படுத்தி தருவார்கள். மேலும் திப்பரேவு தொப்பம்பட்டி அணையும் கட்டப்படும்.

ஓட்டுக்கு பணம் வழங்குவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், கடந்த முறை நான் தோல்வி அடைந்தபோது 21 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தேன். தோல்வியடைந்ததை குறித்து விமர்சிக்க நான் விரும்பவில்லை. மக்கள் தற்போது வரை கேட்கும் உதவிகளை நான் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

மக்களுக்குத் தெரியும் நான் செய்த நலத்திட்டங்கள். தேர்தலுக்கு பணம் வழங்கும் முறை என்பது நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என்னால் கொடுக்க முடியாது என்று இல்லை. ஆனால் மக்களுக்கான உதவிகளை மட்டும் நான் செய்துள்ளேன்.

தேனி மக்களை உறவினர்களாக நினைக்கிறேன். அவர்களுக்கு 300, 500 என்று கொடுப்பது எனக்கு உடன்பாடு கிடையாது.  ஓ பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதி புதிய தொகுதி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு என்னுடன் வந்திருந்தார். ஒன்றாம் தேதி தான் அங்கு அவர் சென்றுள்ளார், அங்கு அவருடைய தேர்தல் பணி காரணமாக அவர் எனக்கு பிரச்சாரம் செய்ய வரவில்லை மத்தபடி ஒன்றும் கிடையாது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் வர வேண்டாம் எனது மனைவி அனுராதாவை அனுப்புங்கள், உங்களைக் காட்டிலும் அதிக கூட்டம் அவர்களுக்கு வருகிறது, போகும் இடம் எல்லாம் அனுராதாவை பிரச்சாரத்திற்கு அனுப்புங்கள் என தேனி பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

என்னுடன் இருக்கும் கட்சியினரும் சமூக வலைதளங்களில் என்னை காட்டிலும் அதிகமான பார்வையாளர்கள் மனைவிக்கு இருப்பதாகவும் என்னிடமே கூறுகின்றனர். எனது மனைவி அனுராதா பக்குவமானவர் அவர் பக்குவமாக கையாள்வார். எனது மனைவி அத்தை மகள் தான் நீங்கள் எல்லாம் என்னை லட்சணமாக இருப்பதாக கூறுவதால் அவருக்கு பொறாமை, என்னை குக்கர் முகம் டிடிவி என அவர் கூறியுள்ளதாக கலகலப்பாக தெரிவித்தார். அண்ணாமலையின் பிரச்சாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்று கூறினால் பிராக்கெட்டில் டிடிவி தினகரன் இருப்பேன் அதேபோன்று டிடிவி தினகரன் என கூறினால் பிராக்கெட்டில் ஓ பன்னீர்செல்வம் இருப்பார். எந்த வேறுபாடும் கிடையாது என்று பேசினார்.

எந்த லட்சியத்தை முன்னிறுத்தி நம் இயக்கம் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) தொடங்கப்பட்டதோ, அந்த இலக்கை எட்டும் வரையில் ஓயமாட்டோம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நேர்மையான பாதையில் துடிப்பான தொண்டர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இயற்கை வளப் பாதுகாப்பு, சமூகநீதி, பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கான எண்ணற்ற கொள்கைகளை கொண்டிருக்கும் நமது இயக்கம் எட்டியிருக்கிறது. அதற்கான முதல் நாடாளுமன்றத் தேர்தலை வலுவான சந்திக்கின்றோம்.

வெற்றிக்கான பாதையை படியாக அமைந்திருக்கும், கூட்டணி அமைத்து பாரதப் பிரதமர் மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமரவைப்பதன் மூலம் உலகநாடுகள் மத்தியில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றவும், பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற வழிவகுக்கவும் உதவும் என்பதை மக்கள் அனைவரும் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

Tags: My success can't be done by my traitors : TTV Dhinakaran speech!
ShareTweetSendShare
Previous Post

நாட்டில் உள்ள ஏழைகளின் நலனை இளம் அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும் : குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்!

Next Post

போர்வெல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies