காதலை நிறைவேற்றும் சிவாலயம்!
Sep 30, 2025, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலை நிறைவேற்றும் சிவாலயம்!

Web Desk by Web Desk
Apr 17, 2024, 07:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2000 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில்கள் நிறைய நிறைய தமிழகத்தில் உள்ளன அவற்றில் ஒன்றுதான் திருக்குறுக்கை வீரட்டானம் திருக்கோயில்.

தேவாரப் பாடல் பெற்றத் தலங்களில் சோழ நாட்டில் காவிரி வடகரையில் உள்ள 26 வது திருத்தலமாக விளங்கும் இத் திருத்தலம் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மன்மதனை எரித்த வரலாறு நடந்த இடம் என்பதால் இத்தலம் பெரும்பாலான மக்களால் காமதகன சிவாலயம் என்றே அழைக்கப் படுகிறது.

தீர்க்கவாகு என்னும் முனிவா், இறைவன் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். செல்லும் கோவில்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கங்கை நீரை ஆகாயத்தின் வழியே பெற்று அபிஷேகம் செய்து வந்தார் .
அதாவது , ஒவ்வொரு ஆலயத்தின் முன்னே நின்று நீண்ட தன் கைகளில் கமண்டலத்தை ஏந்தி, வானத்தை நோக்கி நீட்டுவார். கங்கை நீர் கமண்டலத்தில் வரும். அந்தப் புனித நீரைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்து வணங்குவார் .
அப்படியே இந்தக் கோவிலுக்கு வந்த தீர்த்தவாகு முனிவர், இங்கே உள்ள சூல தீர்த்தம் சிறந்தது என்றியாமல் வழக்கம்போல கணகைநீர் பெற கைகளை வானை நோக்கி தூக்கினார் . கங்கை நீர் வருவதற்குப் பதிலாக அவரது கைகள் குறுகின.

ஆலயத்தின் முன்புறமுள்ள திரிசூல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டார். சூலதீர்த்தம் கங்கையை விட புனிதமானது என்பதை அறியாது வழக்கம்போல, கங்கைநீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய முடிவுசெய்து தன் இரு கரங்களையும் ஆகாயத்தை நோக்கி தூக்கினார்.கங்கை நீர் வருவதற்குப் பதிலாக அவரது நீண்ட கைகள் குறுகிப்போயின. உண்மை உணர்ந்த முனிவர் இறைவனை சரணடைந்தார். முதலில் விநாயகரைவணங்கினார் . விநாயகர் அருள் புரிந்தார் . எனவே இங்குள்ள விநாயகர் குறுங்கை விநாயகர் எனப்படுகிறார் . இந்தக் கோவிலும் ‘குறுங்கைத்தலம்’ எனப் பெயர் பெற்றது .

அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை வீரட்டானேஸ்வராக சிவபெருமான்யோகேஸ்வரர் என்ற திருபெயருடன் உற்சவராக அருள்பாலிக்கிறார்.

தனிச் சன்னிதியில் ஆவுடையார் மீது தாமரை இருப்பதும், அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் இருப்பதும் சிறப்பாகும்.

காமனை எரித்த தலம் என்பதால் காம தகன மூர்த்தியாக விளங்கும் சுவாமி , இடது காலை மடித்து,வலது காலை தொங்கவிட்டு , வலது கரத்தில் அபய முத்திரையும் , இடது கரத்தை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார் .
ஆண்டுதோறும் , மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோஸ்தவம் திருவிழாவின் போது , காம தகன விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .

மன்மதனை எரித்த தலம் கூடவே மன்மதனை உயிர்ப்பித்த தலம் என்பதால் காதல் நிறைவேறுவதற்கான தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. சுயம்பு மூர்த்தியாக ,யோக மூர்த்தியாக விளங்கும் மூலவரை வணங்கினால் உடல்பலம்,மனோபலம் யோகபலம் கிடைக்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். திருமணத் தடை நீங்கி, திருமணம் கைகூடும். சந்தான பாக்கியமும் வாய்க்கும்.

நீற்றினை நிறையப் பூசி
நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும்
அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று
தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங்
குறுக்கைவீ ரட்ட னாரே.
என்ற அப்பர் தேவாரப் பாடலைப் பாடி திருக்குறுக்கை இறைவனைத் துதித்து நலம் பெறுவோம்.

Tags: A temple that fulfills love!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies