பாஜக ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத செயல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது: அமித்ஷா பேச்சு!
Oct 28, 2025, 09:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத செயல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது: அமித்ஷா பேச்சு!

Web Desk by Web Desk
Apr 17, 2024, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு மக்களவைத் தொகுதியில் இரு முறை வெற்றி பெற்ற ஜுகல் கிஷோரை பாஜக மீண்டும் களமிறக்கி உள்ளது. அவருக்காக வாக்கு சேகரிக்க ஜம்முவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய அமித் ஷா,

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

காஷ்மீர் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் பாஜக செயல்பட்டு வருகிறது. பாஜக தனது செயல்பாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் மனங்களை வென்றுள்ளது.

வாக்குகளைப் பெறுவதைவிட மக்கள் நலனுக்காக சிறப்பாக செயல்படுவதன் மூலம் அவர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதுவே பாஜகவுக்கு தேர்தல்களில் வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது.

காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இதுநாள் வரை காஷ்மீர் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயகம் மேம்படக் கூடாது என்பதில்தான் இக்கட்சிகள் கவனம் செலுத்துகின்றன.

மக்களின் பாதுகாப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து அவர்களுக்கு அக்கறை கிடையாது. தங்கள் அரசியல் லாபத்துக்காக காஷ்மீர் மக்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள்.

காஷ்மீரில் போலி என்கவுண்ட்டர்களை நடத்தியதும், இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இங்கு முன்பு ஆட்சியில் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவைதான் காரணம்.

கடந்த 70 ஆண்டுகளாக பயங்கரவாதம், வன்முறை, கல்வீச்சு, பிரிவினைவாதம் ஆகியவற்றால் காஷ்மீர் பின்தங்கிவிட்டது. காஷ்மீரும் நாட்டின் மற்ற பகுதிகளைப் போல வளர வேண்டும். இந்த மண்ணின் மக்களுக்கு அனைத்து பயன்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.

சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் பல முறியடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Tags: amithsha
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது! நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

Next Post

சாலை விபத்தில் அரசு மருத்துவர் பலி!

Related News

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies