பாஜக ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத செயல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது: அமித்ஷா பேச்சு!
Mar 16, 2026, 12:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத செயல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது: அமித்ஷா பேச்சு!

Murugesan M by Murugesan M
Apr 17, 2024, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு மக்களவைத் தொகுதியில் இரு முறை வெற்றி பெற்ற ஜுகல் கிஷோரை பாஜக மீண்டும் களமிறக்கி உள்ளது. அவருக்காக வாக்கு சேகரிக்க ஜம்முவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய அமித் ஷா,

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

காஷ்மீர் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் பாஜக செயல்பட்டு வருகிறது. பாஜக தனது செயல்பாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் மனங்களை வென்றுள்ளது.

வாக்குகளைப் பெறுவதைவிட மக்கள் நலனுக்காக சிறப்பாக செயல்படுவதன் மூலம் அவர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதுவே பாஜகவுக்கு தேர்தல்களில் வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது.

காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இதுநாள் வரை காஷ்மீர் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயகம் மேம்படக் கூடாது என்பதில்தான் இக்கட்சிகள் கவனம் செலுத்துகின்றன.

மக்களின் பாதுகாப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து அவர்களுக்கு அக்கறை கிடையாது. தங்கள் அரசியல் லாபத்துக்காக காஷ்மீர் மக்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள்.

காஷ்மீரில் போலி என்கவுண்ட்டர்களை நடத்தியதும், இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இங்கு முன்பு ஆட்சியில் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவைதான் காரணம்.

கடந்த 70 ஆண்டுகளாக பயங்கரவாதம், வன்முறை, கல்வீச்சு, பிரிவினைவாதம் ஆகியவற்றால் காஷ்மீர் பின்தங்கிவிட்டது. காஷ்மீரும் நாட்டின் மற்ற பகுதிகளைப் போல வளர வேண்டும். இந்த மண்ணின் மக்களுக்கு அனைத்து பயன்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.

சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் பல முறியடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Tags: amithsha
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது! நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

Next Post

சாலை விபத்தில் அரசு மருத்துவர் பலி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies