பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல ஆர்வமாக இருப்பதாக இந்திய ஹாக்கி அணியின் தலைவர் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 100 நாட்களே இருக்கும் நிலையில் அணியில் உற்சாகம் அதிகரித்துள்ளது, தங்கப்பதக்கம் வெல்ல நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என இந்திய ஹாக்கி அணியின் தலைவர் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.