தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டம்! - பழனியில் பரபரப்பு
Aug 16, 2025, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டம்! – பழனியில் பரபரப்பு

Web Desk by Web Desk
Apr 19, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு, பழனி சட்டமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதி டி.கே.என்.புதூரில் வசிக்கும் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, 90க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல மாதங்களா தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கேட்டும் எதுவும் செய்து தரவில்லை என்றும் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராததால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயக்குடி போலீசார் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் கூட்டமாக சேராமல் அனைவரும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொது மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: People's protest ignoring the election! - Palani excitement
ShareTweetSendShare
Previous Post

“ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குரலும் முக்கியம்” – பிரதமர் மோடி

Next Post

மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Related News

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies