வாக்குச்சாவடியை பார்வையிட்ட அண்ணாமலையிடம் பூத் சிலிப்பில் புகைப்படம் மாறி இருப்பதாக பெண் புகார் அளித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கரூரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி வரும்பொழுது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீரென தனது காரை நிறுத்திவிட்டு வாக்கு சாவடியை பார்வையிட்டார்.
அப்பொது வாக்குப்பதிவு குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையில் முகம் மாறி இருப்பதாக கூறி வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து இவ்வாறு நடப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து அதிகாரிகளிடம் இந்த புகார் குறித்து அண்ணாமலை பேசி, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவத்தார்.