கல்லூரி மாணவி கொலை!- லவ் ஜிகாத் காரணமா?
Mar 16, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்லூரி மாணவி கொலை!- லவ் ஜிகாத் காரணமா?

Murugesan M by Murugesan M
Apr 22, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் கல்லூரி மாணவி ஒருவர் ஒரு தலை காதல் விவகாரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லவ் ஜிகாத் பிரச்சனையாகவும் இது வெடித்திருக்கிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், தார்வாட் மாநகராட்சியில் கவுன்சிலராகவும் இருக்கும் நிரஞ்சன் ஹிரேமத்தின் மகளான நேகா, ஹூப்ளியில் உள்ள கர்நாடக தொழில் நுட்ப பல்கலைகழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை கல்லூரி வளாகத்தில் வைத்து ,கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வியாழக் கிழமை முகமூடி அணிந்து வந்த 23 வயதான கல்லூரி மாணவர் பயஸ், 7 முறை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி குரூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹூப்ளி காவல் துறை யினரால் கைது செய்ய பட்ட பயஸ் , ‘நேகா முதலில் தம்மை காதலித்தாகவும், பிறகு அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பால் தம்மை விட்டு விலகியதால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேகாவின் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோருக்கு பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாஜகவும் இந்திய நாட்டு மக்களும் நேகா குடும்பத்துடன் இருக்கிறது. நேகாவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும். இந்த வழக்கில் கர்நாடக காங்கிரஸ் அரசு கூறும் பொய்களை, மக்கள் ஏற்க மாட்டார்கள். கர்நாடக காவல் துறையால் இந்த வழக்கை விசாரிக்க முடியாவிட்டால், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்தக் கொலையை, லவ் ஜிஹாத்தின் விளைவு என்றும், கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்றும் கூறி இருக்கிறார்.

பா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இந்த கொலையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தும், நேகாவின் கொலையைக் கண்டித்திருப்பதுடன் கொலைசெய்த நபருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

கொலையான நேகாவின் தந்தை நிரஞ்சன் ஹிரேமத், `தமது மகளுக்கு நடந்ததை ஒட்டுமொத்த மாநிலமும், நாடும் பார்த்ததாக கூறியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் இது நடந்தது என்று எப்படி முடிவு செய்ய முடியும் என்றும், தமது மகள் அடைந்த அதிர்ச்சியை இனி எந்தப் பெண்ணும் இந்த நாட்டில் சந்திக்கக் கூடாது என்றும், லவ் ஜிஹாத் வேகமாகப் பரவி வருவதாக தாம் உணர்வதாகவும் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கொலை செய்த பயஸின் தாய் மும்தாஜ் கூறுகையில், `தமது மகன் செய்தது தப்புதான்’ என்றும், கர்நாடக மக்கள் அனைவரிடமும், அந்தப் பெண்ணின் பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

தம் மகன் காதல் தொந்தரவு செய்வதாக நேகாவின் குடும்பத்தினர் தம்மிடம் புகார் தெரிவித்தனர் என்று கூறியுள்ள பயஸின் தந்தை, ஆனால் யாரும் செய்ய துணியாத இது போன்ற கொடூரச் செயலை செய்த தம் மகனுக்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுக்கட்டும் என பயசின் தந்தை தெரிவித்துள்ளார்

லவ் ஜிகாத்தின் காரணமாக ஒரு கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இனியாவது இந்தியாவில் நடக்க கூடாது என்றும், அதற்கு மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Tags: College Girl Killed!- Is it because of Love Jihad?
ShareTweetSendShare
Previous Post

சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன் கைது!

Next Post

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies