மோசடி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
ஈரோட்டை சேர்ந்த யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, பலரிடமும் பல கோடி ரூபாய் மூதலீடு பெற்றது.
ஆனால், 2022 -ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு யாருக்கும் பணம் திருப்பி கொடுக்கவில்லை. புகாரின் பேரில் அதன் நிறுவனர் முத்து செல்வம் கைது செய்யப்பட்டு, பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தவர்களிடம், பொருளாதார குற்றப்பிரிவுக்கு சென்று உரிய நிவாரணம் தேடிக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அப்போது மோசடி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் தங்களை மிரட்டுவதாக தெரிவித்தனர்.