பவானிசாகர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து, பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து, ஒரு லட்சத்து மூன்று ஆயிரம் ஏக்கர் பாசன நிலத்திற்கு ஐந்து கட்டமாக தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதனை நம்பி விவசாயிகள் பயிரிட்டனர். நான்கு கட்டமாக தண்ணீர் திறந்த நிலையில், ஐந்தாவது கட்டமாக தண்ணீர் திறக்கவில்லை.
இதனால், பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காத பொதுப்பணித்துறையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.