மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காரை ஏற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த அருள் பாண்டி என்பவர், தனது நண்பர்களுடன் கோத்தகிரி வியூ பாயிண்டிற்கு சென்றார்.
அப்போது, அங்கு காரில் வந்த இளைஞர்களுக்கும், அருள் பாண்டி தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அந்த கும்பல் அருள் பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் மீது காரை ஏற்றிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
இதில் அருள்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.