கண்ணகி கோயிலுக்கு சென்ற வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவில் பங்குபெற, கூடலூரிலிருந்து பக்தர்கள் வாகனங்களில் சென்றனர். அப்போது, கொக்கரகண்டம் சோதனை சாவடியில் அவர்களை தடுத்து நிறுத்திய கேரள போலீசார், வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.
இதனால், இரு தரப்பினர் இடை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயணியும், வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்தார். இதனால், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, வாகனங்கள் செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.