திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க
நிரந்தர பணியாளர்கள், தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் என ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதில், 150 பணியாளர்கள் மட்டுமே நிரந்தர பணியாளர்களாக உள்ள நிலையில், சுய உதவி குழுவை சேர்ந்தவர்களையும் ஒப்பந்த பணியாளர்களாக மாற்ற முயற்சி நடப்படதாக கூறப்படுகிறது.
இதனால், 200 -க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சிவம் ஞானதேவராவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.