மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் தடையை மீறி செயல்பட்டவர்களிடம் பிரஷர் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பிரஷர் பம்பு பயன்படுத்தி சிலர் தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.
நீதிமன்ற உத்தரவை மீறிய பக்தர்களிடம் இருந்து பிரஷர் பம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளழகர் வரவேற்பின்போது பாரம்பரிய முறைப்படி தோல் பைகளை மட்டுமே பயன்படுத்தி தண்ணீர் தெளிக்க வேண்டும் எனவும், பிரஷர் பம்புகளுக்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.