கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் டம்மி துப்பாக்கி வைத்திருந்தவர் இடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் வைகை அதிவிரைவு ரயிலில், சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ஒருவர் பையில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக விருத்தாச்சலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், அத்துப்பாக்கி சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் என தெரியவந்தது. இருப்பினும் அவரிடத்தில் ரயில்வே போலீசார் தொடர் விசாரணயில் ஈடுபட்டனர்.