கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பலவானம் பேட்டை கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகமும், அம்பேத்கர் சிலையும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. இந்தநிலையில் மதுபோதையில் அங்கு வந்த 4 இளைஞர்கள் அம்பேத்கார் சிலை மீது குண்டு வீசிவிட்டு தப்பியோடினர்.
ஆனால் பெட்ரோல் குண்டு சிலைமீது படாமல் அருகே உள்ள சுவற்றின் மீது பட்டுள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் வெற்றி, கிருஷ்ணகுமார், சதீஷ், விஜயராஜ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.