கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
தாசனபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் வெங்கடரமணசுவாமி தேர் திருவிழாவின் இறுதி நாளில் நடைபெறும் எருதுவிடும் விழா மிகவும் பிரபலமாகும்.
இந்த ஆண்டுக்கான எருது விடும் விழாவை ஒட்டி, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் அழைத்து வரப்பட்டன.
கொம்புகளில் வண்ணத் தடுக்கைகளைக் கட்டியவாறு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க இளைஞர்கள் தீரத்துடன் முற்பட்டனர். இந்த விழாவை ஒட்டி, 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.