ஈரோடு மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை 109 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக வெப்பநிலை பதிவான இடங்களில், ஈரோடு 3-வது இடத்தில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உட்கட்டமைப்பு விரிவாக்கத்தைக் காரணமாகக் கொண்டு மரங்கள் அழிக்கப்பட்டதே இந்த வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.