கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் கஞ்சா பதுக்கிய இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அந்த வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அங்கு, மூன்று கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த முகமது இம்ரான் மற்றும வேதா நகர் பகுதியைச் சேர்ந்த இமான் நிஹால் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.