புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கோடை விடுமுறையிலும் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதனால் நகரின் பிரதான சாலைகள் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளை சார்ந்து இயங்கி வரும் வியாபாரிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போதிய சுற்றுலாப் பயணிகள் வராததால், காந்தி திடலில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து விட்டனர்.
புதுச்சேரியில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.